Tuesday 20 August 2013

ஸிரியா கடற்படை முக்கிய மூலஸ்தானமான லடாகியா மீது இஸ்ராயலின் தாக்குதல் :- ஒரு ஆழ்ந்த ஆய்வு

|| ஹரி ஓம் || 
 
ஸிரியா கடற்படை முக்கிய மூலஸ்தானமான லடாகியா மீது இஸ்ராயலின் தாக்குதல் :- ஒரு ஆழ்ந்த ஆய்வு

Israeli attack on Syrian Naval Base of Latakia


இஸ்ராயலின் , ஜூலை 5,2013 அன்று ஸிரியாவின் கடற்படை அடித்தளமான லடாகியாமீதான  தாக்குதல், துர்கிஸ்தானிலிருந்து நடத்தப்பட்டதாக  நம்பப்படுகிறது, அதில் ஸிரியாவின் "யாகோண்ட் பீ800 " ஏவுகணை கிடங்கை [ அதாவது ஏவுகணைகள் வைத்திருக்கும் இடம்] முக்கியமாக குறி வைத்தது, அன்றிலிருந்து ஒரு பரபரப்பான சர்ச்சைக்குறிய வாதத்திற்குறிய விஷயமாயிற்று. "யாகோண்ட்" என்ற கப்பல் எதிற்கும் கப்பல் ஏவுகணைகள் உயர்தரமானது, அது ரஷ்ஷியாவினால் , ஸிரியாவிற்கு விற்கப்பட்டனவை ஆகும். இஸ்ராயல் தாக்குதலின் தெரியவந்த அறிக்கையின் படி இந்த ஸிரியாவின்  முக்கிய  கடற்ப்படை தளத்தில் பல அடுத்தடுத்த வெடி அதிர்வு சத்தம் கேட்டன. ரஷ்ஷியாவின் தொலைக்காட்சி ப்பிணையங்கள் இந்த தாக்குதலை இஸ்ராயல், துர்கிஸ்தானும் இணைந்து செய்த திட்டம் என்று கருதியது. ஆனால் கிடைத்த ஆதாரத் தகவல் படி இந்த தாக்குதல் அமெரிக்காவின் நெருங்கிய தொடர்புடன் இஸ்ராயல் செய்த தாக்குதல் என்று தெரிய வந்தது.

உலக செய்தி ஊடகங்கள் வெறிகொண்டு இந்த தாக்குதலை  விமரிசித்தனர்.அதுவும் துர்கிஸ்தானிலிருந்து இஸ்ராயல் தாக்கியதால்
தாக்குதலை ப்பற்றிய முரண்பாடான தகவல்களினால் ஊடகங்கள் பாதித்தன. சிலர் இந்த தாக்குதல்கள் வான்வழித்தாக்கல் என்று கருதினர் , சிலர் இத்தாக்குதல்கள் இஸ்ராயலின் நீர் மூழ்கு கப்பல்களிலிருந்து ஏவு வாணம் [ராக்கெட்]  ஏவு முறை தாக்குதல் என நம்பினர்.ஆனால் நம்பகமான மூலங்கள் ,இஸ்ராயல் தனது பெயர்போன ,நன்கு தேற்ச்சி பெற்ற, ஜெர்மெனியிலிருந்து இறக்குமதி செய்த  டால்ஃபின் க்லாஸ் ஸப்மரீன்களை ஸிரி யாவின் கடற்படைதளத்தை  தாக்க உபயோகித்தனர் என்றது, இத்தாக்குதல் பெரும்பாலும் ரஷ்ஷியா ஸிரியாவுக்கு அளித்த ஏவு கணைகள், இஸ்ராயலின் கடற்படை தளத்திற்கும் அதன் வழங்கல் வினியோகத்திற்கும்  அபாயமான அச்சுறுத்த்தலாக  கருதி  அதையே  குறிவைத்து தாக்கியது போலும். இந்த ஸிரியாவின் ஏவுகணைகள் ஸிரியாவின்  அருகாமையில் உள்ள லெபானானின்  தீவிர வாதி ஹெஜ்பொல்லா, ஸிரியாவின் ஜனாதிபதி பாஷர் ஆசத்தின் அரசாங்கத்திற்கு அப்பட்டமாக ஆதரவு  அளிக்கும்  சங்கங்களுக்கு பரிசல் ஆகும் ஆபாயமும் இருந்தது  .

ஸிரியாவின் ஏவுகணைகள் இஸ்ராயலிர்கு மட்டும் அபாயமாக இல்லாமல் அது  ஸிரியாவின் கலகஞ்செய்யும், எதிர்போர்களுக்கு வழங்கல் வினியோகத்திர்குதவும்     வடநாடுகள்  கப்பல்களை தாக்கும் திறமை அதிகறிக்கப்பட்டதாகவும் , ஸிரியாவின் கடற்ப்படைக்குறிய முற்றுகை இடவும் , அல்லது அதன்மேல் விமானம் செல்ல அனுமதிஇல்லா பகுதிக்கு ஆதரவளிக்கவும் இருக்கலாம்.
இதன்மத்தியில் இஸ்ராயல், ஸிரியா, அமரிக்கா, துர்கிஸ்தான் இதன் சம்பந்தமாக ஒரு அரசாங்க அதிகாரம் சார்ந்த அறிக்கை  கூட வெளியிடவேயில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால் ஸிரியா அரசாங்கம் இஸ்ராயல் தாக்குதலைப்ப்ற்றி முழுமையாக மறுத்துவிட்டது. துர்கிஸ்தானின்  வெளிஉறவு அமைச்சர் அஹ்மெட் தாவுடோக்லுவோ,  இஸ்ராயல் துர்கிஸ்தான் மண்ணிலிருந்து தாக்குதல் பற்றி வதந்தி பறப்புவோர்கள் தண்டிக்கப்படுவர்   ஆவர் என்றரிவித்தார். இந்த மறுப்புக்கு காரணமும் உள்ளன , அதாவது துர்கிஸ்தான் இஸ்ராயலுக்கு உதவிய செய்தி, இரண்டு வருடம் முன்பு இஸ்ராயல் துர்கிஸ்தானில் உள்ள ராணுவமற்ற சாதாரண மக்களின்  மிதக்கும் விடுதியின் மீது நடத்திய தாக்குதல் ,துர்கியின் ரெசெப் எர்டோகான் அரசாங்கத்திற்கு எதிராக திருப்தியின்மை அல்லது நம்பிக்கை குறைவை ஏர்ப்படுத்தும் என்பதே மறுப்புக்கு க்காரணம்.

சமீபத்தில் நடந்த பல கலந்துறையாடல்கள், சந்திப்புகள்,, அதோடு அமெரிக்காவின் தற்காப்பு உபகாரியதரிசி  ஆஷ்டன் கார்டரின்  இஸ்ராயல் சுற்றுலா பயணம் சமயம்,  இஸ்ராயல் அதிகாரிகள் இந்த செய்தி க்கசிவுனால் இஸ்ராயலிற்கு வரநேரும் ஆபாயமும், ஸிரியாவின் பதில் தாக்குதல்கள்,  இஸ்ராயலின் ஜனசமுதாயத்தை  பாதிக்கும் என்று வருத்தமும் கோபமும் தெரிவித்தனர். அமெரிக்காவின் மனமில்லா, பிணைப்பில்லா செயல்கள் இஸ்ராயல் அதிகாரிகளை ஆஸ்சரியத்தில் ஆழ்த்தின.
இதற்கிடையில், இத்தாக்குதல் இஸ்ராயலின் இராணின் தாக்குதலுக்கு ஒரு காய்ந்த  பயிற்ச்சி  போன்றது என்று  பல கைதேற்ந்த வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இராணிடம் கப்பல் ஏவுகணைகளை த்தடுக்க எந்தவித தற்காப்புமில்லை ஆகையால் இதை த்தடுக்க  இராணின்  ஆயுதங்கள் பொருத்தப்பட்டால், இராணின் வான்தள தற்காப்பு பலஹீனமாகிவிடும் . இந்த டால்ஃபின்  நீர் மூழ்கிக் கப்பல் [ஸப்மரீன்] ஸிரியாமீதான   இஸ்ராயலின்  வெற்றித்தாக்குதல் ,இஸ்ராயலுக்கு கப்பல் ஏவு கணை தாக்குதல் நடத்த நல்லதொரு மேடை அயிற்று. இதுவே மத்தியகிழக்கு நாடுகளுக்கிடையே ஒரு பெரும் மாறுதலான விளையாட்டைக்  காணலாம், அதுவே அடுத்து வர இருக்கும் இராணின் அணு ஆயுத நிகழ்நிரலுக்கு ,இச்ராயலின்   தாக்குதலுக்கு  அறிகுறியாக இருக்கிறது.




இந்த தாக்குதல்கள் எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல் , இருக்கும் மோசமான நிலை அதிகமாக வாய்ப்பு உள்ளது. இங்கு இப் ப்ரதேசத்தில் கோப வெப்பம் கொழுந்துவிட்டெரிகிறது, அடிக்கடி திருப்தியின்மை ,கலவரம், ராணுவத்தினால்  அதிகார பறிப்பு, அரசாங்க மாற்றம், மக்கள் புரட்சி,மக்களிடையே போர் போன்ற இத்தகைய சங்கிலி போன்ற ஒன்றன்பின் ஒன்றான நிகழ்வுகள் இந்த ப்ரதேசத்தை நிலையில்லாது ஆக்குவதோடு  அது வருங்கால நிகழ்வுகளுக்கு  பாதிப்புள்ளதாக இருக்கும்.

ஹரி ஓம். "அம்பக்ஞ"

|| ஹரி ஓம் ||





No comments:

Post a Comment